உயர்ந்த உள்ளங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது வெற்றியன்று: போராட்டமே.


                                              லாம்பார்ட்.
அதிகம் பேசுபவன் செயல் புரிவதில்லை.
                      மாசின்


                       
பதவி உங்களுக்குப் பெருமை தருவதைவிட நீங்கள் தான் அதைப் பெருமைபடுத்த வேண்டும்.
                                பெர்நார்க்
ஒரேயடியாக உச்சிக்குப் போய்விட வேண்டுமென்று முயற்சிதான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது.
                                       காவட்
துணிவோடு செயல்படாத காரணத்தால் உலகில் பல திறமைகள் சிதறிப் போகின்றன.
                                   சிட்னி ஸ்மித்
மனிதனுக்கு துணிச்சலைப் போல உலகில் உண்மையான நண்பன் வேறு யாருமில்லை.
                                             சாணக்கியன்
பெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்தே படிக்கின்றார்கள்.
                                                  லிண்டல்
நீங்கள் நீங்களாக இருங்கள்; முகமூடி வேண்டாம்.
                            ஸ்டீவென்சன்
உங்களை ஒருவர் விமர்சித்தல் எரிச்சல் வருகிறதா? அப்படியெனில்  அவ்விமர்சனம் சரியானது.
                     டோக்டசு
உன்னை உண்மையிலேயே புரிந்து கொண்டிருக்கும் நண்பன்தான் உன்னையே உருவாக்குகின்றான்.
                                   ரோமின்
கள்ளம் கபடமற்ற நாத்திகன் அந்த வழக்கம் நிறைந்த வைதீகனைவிட ஆயிரம் மடங்கு மேலானவன்.
விவேகானந்தர்
தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்பவன்தான் உலகிலேயே மிகச் சிறந்த சீர்திருத்தவாதி.
பெர்னாட்சா
நீ வாயைத் திறக்கும் போதெல்லாம் உன் உள்ளத்தைத் திறக்கிறாய்.
யக்
ஆர்வம் இல்லாத இடத்தில் மாபெரும் புதுமைகள் பிறப்பதில்லை.
ராக்மென்
நீங்கள் புதிதாகத் தெரிந்து கொண்டதை, என்று நிறுத்தத் தொடங்குகிறீர்களோ அன்றே உங்களின் முதுமைப் பருவம் தொடங்கி விடுகிறது.
கைபர்ட் கேசன்
இது மனதில் இருக்கட்டும். மனிதன் பயனின்றி அழியக்கூடாது.
காரல் மார்க்ஸ்
தன்னுடன் போட்டி போட்டு வேகமாக ஓடிவெற்றி பெற குதிரைகள் இருப்பதால் தான் ஒரு குதிரை வேகமாக ஓடுகிறது.
ஓவிட்
முடிந்தால் சமாதான மாக இரு.ஆனால் என்ன நேர்ந்தாலும் உண்மையை மட்டும் கூறு.
மார்ட்டின் லுதர்கிங்.
அழுதுகொண்டே பிறக்கிறோம்.குறை கூறிக்கொண்டே வாழ்கிறோம்.ஏமாற்றத்துடனே சாகிறோம்.என்ன சாதித்தோம்.
அதிகமான மக்கள் ஒன்றை நம்புகிறார்களா? அப்படியானால் அக்கருத்தை ஆராய வேண்டும்.
டால்ஸ்டாய்.
கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம்.அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா.
                                                   சிசரோ
ஒருவனுக்கு நீ செய்த உதவிகளை அவனிடம் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருப்பது அவனைப் பழிவாங்குவது போலாகும்.
                                         தேமேச்தனுஸ்
அமைதியாக இருங்கள்; நீங்ககள் யாரையும் வசப்படுத்திவிடலாம்.
                                
மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவம்.      
                                             பேர்ள். எஸ். பக்
ஓர்  ஆண்டு  குடிப்பதும், ஓர் ஆண்டு   முழுவதும் சிந்திப்பதும் ஒன்றே.
                             சார்லஸ் கார்டன்.
       பெரும்பாலும்  முதல்  சிந்தனை  தெளிவற்றதாக இருக்கும்.
                   எதற்கும் மறுசிந்தனை செய்யுங்கள்.
                                       ஷேக்ஸ்பியர்  .
சேமிக்க வேண்டிய நேரத்தில் செலவு செய்யாதீர்கள்.செலவு செய்ய வேண்டிய நேரத்தில் சிக்கனம் செய்யாதீர்கள்.
                                                              செனாகா
உலகத்தில் மிகவும் மலிவான பொருள் அன்புதான்.அதை வாங்குகிறவனுக்கும்,விற்பவனுக்கும் பன்மடங்கு லாபத்தைத் தரும்.


                                                                      இங்கர்சால்.
குடும்பம் நன்றாக வாழ வேண்டுமானால் மனிதர்கள் இயற்கையாக அழுதால் மட்டும் போதாது.செயற்கையாகவாவது சிரிக்கவும் வேண்டும்     
                                       கண்ணதாசன்
கண்டனத்தைத்      தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லை
எனில் கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியாது.
                                     அண்ணா.
கோபம்   அன்பை  அழிக்கிறது .செருக்கு  அடக்கத்தை அழிக்கிறது.
                                                      மகாவீரர் 
வரவுக்கு மேல் செலவு செய்பவன் விபச்சாரிக்கு சமமானவன்.
                                                   பெரியார்.
தொழில்  எவ்வளவு கீழ்த்தரமாக இருந்தாலும் பரவாயில்லை,சோம்பேறியாக இருப்பதுதான் அவமானம்.
                                                                    -டால்சுடாய்
மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.
ஆடம்பரம் என்பது என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை.
                                                            -சாக்ரடீஸ்.
என்னால் எதையும் சாதிக்க முடியும் என்று தன்மீது நம்பிக்கை வைத்திருப்பதே வெற்றியின் இரகசியம்.
                                                 -இராக்கர்.
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே !
தமிழர் நடுவில் விரவிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான பொன்மொழிகளை இந்த வலைப்பூ தொகுக்க முனைந்துள்ளது.
தமிழரின் பண்டைய நூல்களெல்லாம் அனல்வாதம்,புனல்வாதம் எனும் பெயரால் அழிந்தன.
ஆனால், இந்த கணினிக்  காலத்தில் நமது படைப்புகளைப் பாதுகாக்க, சேமிக்க வலைத்தளங்களின் பணி அளப்பரியது.
 தமிழ்  மக்கள் புழங்கும் பொன்மொழிகளை, 
இவ்வலைப்பூ தொகுத்து வழங்குகிறது.

நன்றி!


  பொன்மொழி
  வலைப்பூ இதழ்.